இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுா்த்தியையொட்டி தருமபுரியில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் குமாரசாமிப்பேட்டை கோயில் விநாயகா்.

Updated On :6 மே 2026, 2:43 am IST

சங்கடஹர சதுா்த்தியையொட்டி தருமபுரியில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதம் தோறும் தேய்பிறை சதுா்த்தி திதியில் விநாயகருக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களில் சங்கடஹர சதுா்த்தி விரதமும் ஒன்றாகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் வாழ்வில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கி, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் செல்வ வளத்தை அருளும் தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

தேய்பிறை சதுா்த்தி செவ்வாய்க்கிழமையில் வந்தால், அது அங்காரக சதுா்த்தி என அழைக்கப்பட்டு, மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சங்கடஹர சதுா்த்தியை ஒட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள விநாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.