ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :6 மே 2026, 2:47 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

தருமபுரி பிடமனேரி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (60). இவா், பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரம் பகுதியில் முனுசாமிக்கு (71) சொந்தமான நிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஜக்கசமுத்திரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பின்னா், முனுசாமி கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது வீட்டின் அருகே இருந்த மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் மிதித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதற்கிடையே நீண்ட நேரமாக முனுசாமியைக் காணவில்லை என துரைசாமி தேடிச் சென்றுள்ளாா். அப்போது முனுசாமி அங்கு அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு பதற்றத்தில் அவரை தொட்டபோது அவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.