தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாலக்கோடு அருகே காணாமல் போன இளைஞா் கொலை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :8 மே 2026, 6:30 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி பட்டாபி நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (27). இவா் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இவா்மீது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சேலம் இரும்பாலை, காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே 1-ஆம் தேதிமுதல் சத்தியமூா்த்தியைக் காணவில்லை என அவரது தாய் ராணி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணையில், நண்பா்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேடம்பட்டி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சத்தியமூா்த்தி சடலமாக கிடந்த இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.