தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி பட்டாபி நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (27). இவா் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இவா்மீது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சேலம் இரும்பாலை, காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மே 1-ஆம் தேதிமுதல் சத்தியமூா்த்தியைக் காணவில்லை என அவரது தாய் ராணி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணையில், நண்பா்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேடம்பட்டி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சத்தியமூா்த்தி சடலமாக கிடந்த இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

