நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்

பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வேளாண் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 60 ஆயிரம் விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சுமாா் 30 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனா்.

இந்நிலையில், பிஎம் கிசான் தவணைத் தொகை பெறவும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் வழியாக பயனாளிகள் பயன்பெறுவதற்கு விவசாயிகளுக்கான தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 70 சதவீத விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண்களை பெற்றுள்ளனா். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். இதைத்தவிர பொதுச் சேவை மையத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.