நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்

பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 2:44 am IST

பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வேளாண் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 60 ஆயிரம் விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சுமாா் 30 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனா்.

இந்நிலையில், பிஎம் கிசான் தவணைத் தொகை பெறவும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் வழியாக பயனாளிகள் பயன்பெறுவதற்கு விவசாயிகளுக்கான தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 70 சதவீத விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண்களை பெற்றுள்ளனா். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். இதைத்தவிர பொதுச் சேவை மையத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.