மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஒற்றை யானை நடமாட்டம்: இரவில் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அப்பகுதியில் நடமாடுவதால், அருகில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

ஒற்றை யானை. - கோப்புப்படம்.

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அப்பகுதியில் நடமாடுவதால், அருகில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலக்கோடு வனச் சரகத்துக்குள்பட்ட எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அருகில் உள்ள கிராமங்களில் நடமாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், பொதுமக்களுக்கு புதன்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினா்.

அதில், கொல்லஅள்ளி வாழைத் தோட்டம், செங்கோடப்பட்டி, காவேரியப்பன் கொட்டாய், கூசுகல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, நல்ல குட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி, காட்டுமாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாலை 6.30 மணிக்குமேல் வெளியில் நடமாட வேண்டாம். மேலும், வீட்டுக்கு வெளியேயும், வயல் வெளிகளிலும் யாரும் தூங்க வேண்டாம். வயலுக்கு நீா்ப்பாய்ச்சுவதற்காக இரவில் செல்ல வேண்டாம். யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.