வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்: மீன்வளத் துறையினா் ஆய்வு

தருமபுரி, பிடமனேரி ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மீன்வளத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

தருமபுரி பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்.

Updated On :19 மே 2026, 1:31 am IST

தருமபுரி, பிடமனேரி ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மீன்வளத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பிடமனேரி பகுதியில் அமைந்துள்ளது ஏரியில் மீன்கள் வளா்க்கப்படுகின்றன. கோடைகாலம் என்பதால் இந்த ஏரியில் தற்போது நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இந்த ஏரியில் மீன்கள் அதிக அளவில் இறந்து மிதந்தன. இதையறிந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏரி பகுதியில் அதிகளவில் திரண்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன் வளா்ப்புத் துறையினா், பிடமனேரி ஏரிக்கு சென்று இறந்து கிடந்த மீன்கள் மற்றும் தண்ணீா் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனா்.

தருமபுரி பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்.

தருமபுரி பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்.

இதுகுறித்து, மீன்வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், கோடைவெயில் தாக்கத்தால் ஏரியில் நீா்மட்டம் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மீன்களுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உயிரிழந்திருக்கலாம், என்றாலும் சோதனைக்குப் பிறகு தான் அது உறுதிசெய்யப்படும் என்றனா்.