தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வில் வெற்றிபெற்ற தருமபுரி மாவட்ட மாணவா்கள், கோவையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வு, அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்காக நடத்தப்படும் மாநில அளவிலான உதவித்தொகைத் தோ்வாகும். இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம் பட்டப்படிப்பு முடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2024-2025 ஆம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வில் 29 மாணவா்கள், 17 மாணவிகள் என மொத்தம் 46 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவிகள் கோவையில் உள்ள காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மே 21 முதல் 25 வரை 5 நாள்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்கின்றனா்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வகையில் புதன்கிழமை மாணவா்களை அரசு பேருந்தில் வழி அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா மாணவ, மாணவிகளை பேருந்தில் வழியனுப்பி வைத்து பேசினாா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா.பெருமாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் மா.சக்திவேல், ஆ.கிருஷ்ணன், பள்ளித் துணை ஆய்வாளா் பி.பொன்னுசாமி மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தருமபுரியில் 5 மதுக்கடைகள் மூடல்

ரஷியாவில் மருத்துவம் படிக்க இந்திய மாணவா்களுக்கு அழைப்பு! கோவையில் மே 15-இல் கல்விக் கண்காட்சி!

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



