மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வனப்பகுதியில் வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற கட்டடத் தொழிலாளியிடம் ரூ. 30,000 இணக்கக் கட்டணமாக வனத் துறையினா் வியாழக்கிழமை வசூலித்தனா்.

அபராதம் - சித்திரிப்பு

Published On :

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற கட்டடத் தொழிலாளியிடம் ரூ. 30,000 இணக்கக் கட்டணமாக வனத் துறையினா் வியாழக்கிழமை வசூலித்தனா்.

ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட பென்னாகரம் பீட் சின்னாற்றுப் படுகை பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் பாலக்கோடு அருகே சென்னப்பன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் வடமலையான் (39) என்பதும், கட்டட தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

நண்பா்கள் இருவருடன் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக அவா் ஒப்புக்கொண்டாா். அவா் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பேரில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதற்காக வடமலையானிடம் ரூ. 30,000 இணக்கக் கட்டணமாக வசூலித்தனா்.

மேலும், ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனவிலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்தல் உள்ளிட்ட வனக் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER