
கவிதைப் போட்டியில் ஒசூர் கவிஞருக்கு முதல் பரிசு
உலக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் ஒசூர் கவிஞருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது .
உலக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் ஒசூர் கவிஞருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது .
இலங்கை மட்டக்களப்பில் இயங்கிவரும் தடாகம் கலை இலக்கிய வட்டம் இணைய தளத்தின் மூலம், உலக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் ஒசூர் பாவலர் கருமலை தமிழாழன் முதல் பரிசு பெற்றார்.
இந்த பரிசு வழங்கும் விழா கடந்த பிப்.28-இல் இலங்கை மட்டக்களப்பில் உள்ள ஒட்டமாவடி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தடாக இலக்கிய வட்டத்தின் தலைவர் கலைமகள் இதயா ரிசுவி தலைமை வகித்தார். இலங்கையின் கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன், கிராமிய மேம்பாட்டு துணை அமைச்சர் அமீர்அலி ஆகியோர் இணைந்து பாவலர் கருமலை தமிழாழனுக்கு கவியருவி விருது வழங்கி சிறப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






