குண்டர் தடுப்புச் சட்டத்தில் சென்னையைச் சேர்ந்தவர் கைது

ஒசூரில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னையைச் சேர்ந்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
Updated on
1 min read

ஒசூரில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னையைச் சேர்ந்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
ஒசூர் நகரக் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் வீடு புகுந்து திருடி வந்த சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இவர் வேலூர் மாவட்டம், சிங்கார நகர் முருக்கேரி குப்பத்தில் வசித்து வந்தார். வழிப்பறி, திருட்டு வழக்குகள் என பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட வெங்கடேஷ், அண்மையில் ஒசூர் மகாலட்சுமி நகரில் வீடு புகுந்து திருடினார். இதையடுத்து, எஸ்பி மகேஷ்குமார் பரிந்துரையின் பேரில் வெங்கடேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com