இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 23,133 பேர் மனு அளித்துள்ளனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:33 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 23,133 பேர் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,850 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளதல் மற்றும் இடமாறுதல் செய்வதற்கான விண்ணப்பங்கள் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ பெறுதல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்தராவ் விஷ்ணுபாட்டீல் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியது:
இந்த முகாமில் இரண்டு முறை பதிவு சரிபார்த்தல், வாக்காளர் எண்ணிக்கை, வீடு தோறும் வாக்காளர் பட்டியல் உள்ளவாறு சரி செய்யப்பட்டுள்ளதா? வெளியூர் சென்றவர்கள் விவரம், சட்டப்பேரவைத் தொகுதியில் முகவரி மாற்றம் செய்வது குறித்து அந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். 
இதுவரை நடைபெற்ற முகாம்களில் படிவம் 6-ஐ 18,533 பேரும், படிவம் 7-ஐ 1,370 பேரும், படிவம் 8-ஐ 2,138 பேரும், படிவம் 8-ஏ ஐ 1,092 பேரும் என மொத்தம் 23,133 பேர் மனுக்களாக அளித்துள்ளனர். மேலும், இந்த முகாம், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அக்.14-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
அக்டோபர் கடைசிவரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் உள்ள வாக்காளர் அலுவலர்களிடம் நேரில் வழங்கலாம் என்றார். 
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.