நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஒசூர் அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் காயம்

ஒசூர் அருகே நின்றிருந்த லாரி மீது கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:34 am IST

ஒசூர் அருகே நின்றிருந்த லாரி மீது கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
ஒசூர் அருகே சப்படி கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கர்நாடக மாநில அரசுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதியதில் காயமடைந்த 10 பேர் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தொடரும் விபத்துகள்...
தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரிகள் மீது அவ்வப்போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதைத் தடுக்க ஒசூர் டி.எஸ்.பி மீனாட்சி தலைமையில் கடந்த வாரம் அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு தகுந்த அறிவுரை வழங்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.