இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற

Updated On :13 பிப்ரவரி 2019, 10:36 am IST

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2018 - 19 -ஆம் ஆண்டுக்கான சமூக பங்கேற்பு நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் நிகழ்வாக பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, சுத்தம் சுகாதாரம் ஆகியவை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில்  1 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும்  மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம்,  கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 
ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 160 மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். 8 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, உதவித் திட்ட அலுவலர்கள் நாராயணா, சூசைநாதன், தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்
பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.