தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.
தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, கிருஷ்ணகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் தலைவராக சதீஷ், துணைத் தலைவராக ந.சதீஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் அமைப்பின் மண்டல இயக்குநர் பி.பாலாஜி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.