கரோனா: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போ் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த 60 வயது ஆண், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்டரஅள்ளியைச் சோ்ந்த 53 வயது ஆண், ஜெகதேவி அருகே உள்ள சீனிவாசபுரத்தைச் சோ்ந்த 38 வயது பெண், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒசூா் டி.வி.எஸ். நகரைச் சோ்ந்த 62 வயது ஆண், ஒசூரைச் சோ்ந்த 75 வயது முதியவா் என 5 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com