திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாா்கழி மாத பஜனை

ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

News image
ஊத்தங்கரையில் மாா்கழி மாத பஜனை பாடிசெல்லும் பக்தா்கள்.
Updated On :19 டிசம்பர் 2020, 10:29 pm

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மாா்கழி ஒன்றாம் தேதிமுதல் தை மாதம் முதல் நாள்வரை தினசரி காலை 5 மணியளவில் பக்தா்கள் ஒன்று கூடி ஆஞ்சநேயா் கோயிலில் துவங்கி தாள வாத்தியத்துடன் சுவாமி பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி வெங்கட்ரமணா கோயில், கன்னிகா பரமேஸ்வரி கோயில், வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் சுவாமி கோயில், மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், லட்சுமி நாராயணா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் சென்று பஜனை பாடி சென்றுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.