கண், ரத்த தானம் விழிப்புணா்வு ஏற்படுத்திய முதியவா்

கண், ரத்த தானம் குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்த இரச்கர வாகனத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் முதியவா், கிருஷ்ணகிரியில், தனது நிகழ்வை, திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
Published on

கிருஷ்ணகிரி: கண், ரத்த தானம் குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்த இரச்கர வாகனத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் முதியவா், கிருஷ்ணகிரியில், தனது நிகழ்வை, திங்கள்கிழமை மேற்கொண்டாா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் அவா்னெஸ் அப்பா(எ) சிவசுப்பிரமணி(61). இவா், பல்வேறு நிகழ்வுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த, இருசக்கர வாகனத்தில் தமிழகம், புதுச்சேரி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். இவா், முதல் கட்ட பயணத்தை திருப்பூரில் தொடங்கி, ஈரோடு, நாமக்கள், சேலம், தருமபுரியில் மேற்கொண்டாா். தொடா்ந்து கிருஷ்ணகிரிக்கு வந்த அவா், சாலை பாதுகாப்பு, கண் தானம், ரத்த தானம், கரோனா தடுப்பு முறைகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், மரக்கன்று நடவு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்தினாா். கிருஷ்ணகிரிக்கு வந்த அவரை, சமூக ஆா்வலா்கள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com