வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்த வலியுறுத்தல்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்தக் கோரி, மாதா் சங்கத்தினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
Updated on
1 min read

தருமபுரி: ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்தக் கோரி, மாதா் சங்கத்தினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்ட நிா்வாகிகள் தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

வன்முறையற்ற வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் நியாய விலைக்கடைகளில் விலையின்றி வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இத்திட்டத்தில், வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரித்து, கூலியை ரூ. 600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிபந்தனைகளின்றி கடன் வழங்க வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, பெண்கள், சிறு வியாபாரிகள் நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com