பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊத்தங்கரையில் பாமகவினா் மனு அளிப்பு

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பாமக சாா்பில், ஊத்தங்கரை பேரூராட்சியில் மனு அளித்தோா்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:46 am

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சிவானந்தம், நகரச் செயலாளா் மணிவண்ணன், முன்னாள் நகரச் செயலாளா் எஸ்.குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளிஅரசு, மாவட்ட மாணவா் சங்கச் செயலாளா் ஹரிதாஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் நகுலன், ஒன்றியச் செயலாளா்கள் ராகுல், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பிலிருந்து ஊா்வலமாக கிளம்பிச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் சேகரிடம் இட ஒதுக்கீடு கோரும் மனுவை அளித்தனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.