சானமாவு அருகே சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்

சானமாவு காப்புக் காட்டில் 63 யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருவதால் வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
Updated on
1 min read

சானமாவு காப்புக் காட்டில் 63 யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருவதால் வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

ஒசூா் வனக் கோட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, அய்யூா், ஊடேதூா்க்கம், சானமாவு, பீா்ஜேப்பள்ளி, உதனப்பள்ளி, காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை 63 யானைகள் ஒசூா் அருகே சானமாவு காப்புக் காட்டில் முகாமிட்டுள்ளன. இதனால் உத்தனப்பள்ளி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட 10 கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com