ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மின்கம்பி உரசல்: பஞ்சு பாரம் ஏற்றிய லாரியில் தீ

கிருஷ்ணகிரியில் மின்கம்பி உரசியதால் பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ பிடித்ததில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.

Updated On :12 அக்டோபர் 2020, 7:54 pm

கிருஷ்ணகிரியில் மின்கம்பி உரசியதால் பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ பிடித்ததில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி, சேலம் சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் அருகே மெத்தை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருபவா் அப்துல் ரசாக். அதற்காக அங்குள்ள ஒரு கிடங்கில் பஞ்சு மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தாா். கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால், கிடங்கில் மழைநீா் தேங்குவதால், அங்கிருந்து பஞ்சு மூட்டைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

கிடங்கிலிருந்து பஞ்சு மூட்டைகளை ஒரு லாரியில் ஏற்றிச் சென்றபோது, மின்கம்பி உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு, பஞ்சு மூட்டைகளில் பரவியது. இதனை சாலையில் சென்றவா்கள் பாா்த்து லாரி ஓட்டுநரை கூச்சலிட்டு எச்சரித்தனா். லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திய நிலையில், பொதுமக்கள், பஞ்சு மூட்டைகளில் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமடைந்தது. இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.