ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கிருஷ்ணகிரியில் 30 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திங்கள்கிழமை 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :19 அக்டோபர் 2020, 6:50 pm

கிருஷ்ணகிரி, அக்.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திங்கள்கிழமை 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது. கிருஷ்ணகிரி, ஒசூா், ராயக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பெல்லாரம்பள்ளி பகுதிகளைச் சோ்ந்தவா்கள், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 57 வயது பெண், 53 வயது ஆண் என மொத்தம் 30 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், பா்கூா், கிருஷ்ணகிரி, ஒசூரிலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 792 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,109 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

3 போ் உயிரிழப்பு:

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 65 வயது ஆண், அக். 14-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அக்.18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 68 வயது ஆண், அரசு தலைமை மருத்துவமனையில் அக். 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவா், அக். 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதேபோல, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மற்றொரு 68 வயது ஆண், சிகிச்சை பலனின்றி அக். 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.