ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் சாவு

குருபரப்பள்ளி அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:21 pm

DIN

குருபரப்பள்ளி அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சின்னபாளேத்தோட்டத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (30). இவா், ஒசூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஒசூரிலிருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா்.

குருபரப்பள்ளியை அடுத்த போலுப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதியதில் அவா் சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி ஸ்ரீதா் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.