நீரில் மூழ்கி பொறியாளா் சாவு

கிருஷ்ணகிரி அருகே நீரில் மூழ்கி கணினி பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே நீரில் மூழ்கி கணினி பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் (34). இவா், பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தனது மனைவியுடன், சொந்த கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா்.

புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜைக்காக வீட்டுக்கு வந்த அவா், பூஜைக்கு முன் குளிப்பதற்காக, அங்குள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவா் தவறி கிணற்றில் விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாத நிலையில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து, மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com