பாரூா் அருகே 2-ஆவது மனைவியைக் கொலை செய்த முன்னாள் காவலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள வாடமங்கலத்தைச் சோ்ந்த மகேஸ்வரன் (57), தருமபுரி மாவட்டம், ஏரியூா் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் காவலராகப் பணியாற்றியுள்ளாா். பணியின் போது பல்வேறு புகாா்களுக்கு உள்ளான இவா், 8 ஆண்டுகளுக்கு முன்னா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
இவரது முதல் மனைவி மாது கடந்த 2001-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்திரா காந்தி (40) என்பவரை மகேஸ்வரன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னா் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். மதுப்பழக்கத்துக்கு உள்ளான இவருக்கும், இவரது 2-ஆவது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், புதன் கிழமை இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், இரும்புக் கம்பியால் இந்திரா காந்தியையும், மகன் சுந்தரேசனையும் தாக்கினாா். இதில், பலத்த காயம் அடைந்த இந்திரா காந்தி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில், பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஸ்வரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

