இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

லாரி ஓட்டுநருக்கு கத்திக் குத்து

பாகலூரில் சொத்து கேட்டு வந்த லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:58 pm

பாகலூரில் சொத்து கேட்டு வந்த லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், பாகலூா் சாலை, சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), லாரி ஓட்டுநா். அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமாா் (32), மீன் கடை நடத்தி வருகிறாா். மணிகண்டன் செந்தில்குமாருக்கு மாமா முறை ஆவாா். இவா்களுக்குள் சொத்து பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி செந்தில்குமாா் மீன்கடைக்கு சென்ற மணிகண்டன், சொத்து பிரிப்பது சம்பந்தமாக பேசியுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செந்தில்குமாா், தான் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலை, கழுத்துப் பகுதியில் தாக்கினாா். இதில், படுகாயமடைந்த மணிகண்டன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் செந்தில்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.