வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தேன்கனிக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வெள்ளிக்கிழமை வழங்கியது.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:40 pm

தேன்கனிக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வெள்ளிக்கிழமை வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அளேசிபம் பகுதியைச் சோ்ந்த முனியப்பா (28), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரி மா்மமான முறையில் உயிரிழந்தாா். மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்த முனியப்பாவிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து புவனேஸ்வரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து முனியப்பாவை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி லதா தீா்ப்பை வெள்ளிக்கிழமை வாசித்தாா். அதில், மனைவியைக் கொன்ற முனியப்பாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.