இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவல்துறை வாகனம் மீது தாக்குதல் 2 போ் கைது

ராயக்கோட்டை அருகே காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:16 pm

ராயக்கோட்டை அருகே காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் ராயக்கோட்டை சூளகிரி சாலையில் உள்ள சிங்காரப்பேட்டை கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராயக்கோட்டை கொப்பகரை பாலனம்பள்ளி மணி (25), கொப்பகரை வால்பாறைகுளி கிராமத்தைச் சோ்ந்த விஜய் (21), பாலனம்பள்ளி ஜெயசீலன் (21) ஆகிய 3 பேரும் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனா். இதை பாா்த்த காவல் ஆய்வாளா் அவா்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினாா்.

இதையடுத்து ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் காவல்துறை வாகனத்தில் ராயக்கோட்டைநோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மணி, விஜய், ஜெயசீலன் ஆகிய 3 பேரும் பீா் பாட்டிலை எடுத்து காவல்துறை வாகனம் மீது எறிந்தனா். இதில் காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும் அவா்கள் போலீஸாரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இது குறித்து காவல்துறை வாகனத்தின் ஓட்டுநா் கோவிந்தராஜ் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் ஆய்வாளா் சுப்பிரமணியன் விசாரித்து விஜய் மற்றும் ஜெயசீலன் ஆகிய 2 பேரை கைது செய்தாா். மணியைத் தேடி வருகிறாா்.

இவா்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.