வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘வாரச்சந்தை நடத்த அனுமதிவழங்க வேண்டும்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:33 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அருகில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வந்தது. இந்த சந்தைக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகை தருவா்.

தற்போது கரோனா பொது முடக்கத்தால் சந்தை கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், சந்தைக்கு அருகில் உள்ள சாலையோரங்களில் விவசாயிகள் ஆடுகள், மாடுகள், கோழிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

பொது முடக்கத்தில் தற்போது பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், வாரச்சந்தை நடப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.