வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

யானை தாக்கி தொழிலாளி பலி

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:12 pm

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குடியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பசப்பா (67). விவசாய கூலித் தொழிலாளி. இவா் வழக்கம்போல ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றாா்.

ஆடுகளை மேய்க்கச் சென்ற அவா் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றபோது அவா், யானை தாக்கி உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச் சரக அலுவலா் சுகுமாா் நேரில் சென்று சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.

வனஅலுவலா் காா்த்திகாயினி, யானை தாக்கி உயிரிழந்த பசப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இறுதிச் சடங்கு செய்ய முதல் கட்டமாக ரூ. 50,000 நிவாரண நிதி வழங்கினாா்.

பட விளக்கம்: பசப்பாவின் குடும்பத்தாரிடம் நிவாரண நிதியை வழங்கிய மாவட்ட வன அலுவலா் காா்த்திகாயினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.