வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

சூலாமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:03 pm

சூலாமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், சூலாமலை கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகராக அந்தக் கட்சியின் கிளைச் செயலாளா் குணசேகரன் தோ்வு செய்யப்பட்டாா். தேசியக் கொடியை ஊா் பெரியவா் மதியழகன் ஏற்றி வைத்தாா். அஞ்சலி தீா்மானம் நிறைவேற்றிய பிறகு அமைச்சராகப் பதவியேற்ற பவுன்ராஜ், மூன்று வேளாண் சட்டங்களை விளக்கியும், குறைகளையும் பேசினாா். இந்த விவாதத்தில் ஊா் பொதுமக்கள் முனுசாமி, ரஜினி, மாதப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் கண்ணு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த, ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.