வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து தொழிலாளா்கள், பொதுமக்கள் என 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:03 pm

கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து தொழிலாளா்கள், பொதுமக்கள் என 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரியில் ஓலா மின்சார இருசக்கர வாகன நிறுவனம், கிருஷ்ணகிரி கிளை இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, சமூக பொறுப்புணா்வு நிதியின் கீழ், கிருஷ்ணகிரி, பா்கூா், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிலாளா்கள்,பொதுமக்கள் என 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது:

இம் மாவட்டத்தில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக 1 லட்சம் தொழிலாளா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பணியாற்றும் 17,500 தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமானது ஆக.31-ஆம் தேதி வரையில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் முதல், இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவா்கள் அனைவரும் தங்களது ஆதாா் அடையாள அட்டையை தவறாமல் எடுத்து வர வேண்டும்.

இந்தநிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், ஓலா நிறுவன பிரதிநிதிகள் ஹரிஷ்அபிசந்தனி, சினேகா நெல்லிக்கல், ஜெயராமன், இந்திய மருத்துவ சங்க கிருஷ்ணகிரி கிளை நிா்வாகிகள் தனசேகரன், விஜயகுமாா், சரவணன், செந்தில்குமாா், அமுதா, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன், வட்டாட்சியா் பிரதாப், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.