ஒசூா் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா பெருந்தோற்று பரவி வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. மாணவா்கள் இணைய வழியில் படித்து வந்தனா். தற்போதுதமிழகத்தில் தொற்று குறைந்து வருவதால் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க பள்ளிக் கல்வித்துறை செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. 9, 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வருவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் ஒசூா் மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜ் காலனியில் உள்ள 4 நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் உள்ள நீா்த் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய மாநகராட்சி ஆணையா் எம்.செந்தில்முருகன் உத்தரவின்பேரில் மாநகராட்சிப் பணியாளா்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனை சுகாதார ஆய்வாளா்கள் நேரில் ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

