சிங்காரப்பேட்டை அருகே மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (40). மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ரவி, காமாட்சியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுள்ளாா். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ரவி அரிவாளால் காமாட்சியை வெட்டிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து, காமாட்சியின் சகோதரா் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ரவியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி லதா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
அதில், ரவி குற்றவாளி என்றும் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தாா். அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

