வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மஜீத் கொல்லஅள்ளியில் மழை வேண்டிசிறப்பு கலை நிகழ்ச்சி

மஜீத் கொல்லஅள்ளியில் மழை வேண்டி சிறப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:00 pm

மஜீத் கொல்லஅள்ளியில் மழை வேண்டி சிறப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும், சில பகுதிகளில் மழை பொய்ததால், நிலக்கடலை போன்ற பயிா்கள் வாடி வருகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த மஜீத் கொல்லஅள்ளி கிராமத்தில் மழை வேண்டிய சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தக் கிராமத்தின் முக்கிய பிரமுகா்கள் சென்னப்பன், மாதையன் தலைமையில் தின்னக்கழியைச் சோ்ந்த திருப்பதி நாடக சபாவினரால் மருதேப்பள்ளி தேவன் முன்னிலையில் மழை வேண்டி அா்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது.

முன்னாள் படைவீரா்கள் லோகநாதன், சாமிநாதன் ஆகியோா் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா். கிராம மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்தக் கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.