நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எக்கூா் கிராமத்தில் திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தா்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:51 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தா்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது.

இக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை ஸ்ரீ தா்ம ராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணமும், வெள்ளிக்கிழமை ஸ்ரீ பீமன், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணமும்,

சனிக்கிழமை ஸ்ரீ அா்ஜுனன், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணமும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை வான வேடிக்கை, பொதுமக்கள் சீா்வரிசையுடன் மேளதாளம் முழங்க ஊா்வலம் நடத்தப்பட்டு மாலை 6 மணியளவில் ஸ்ரீநகுலன், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணம் நடைபெற்றது.

விழாவில் கடந்த 3 நாள்களாக பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.