இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சபரிமலை ஐயப்பன் பிரசாதம்: இணைய வழியில் பதிவு தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற இணைய வழியில் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:24 am

DIN

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற இணைய வழியில் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தபால் மூலமாகப் பிரசாதம் வழங்குவதற்கான இணைய வழியிலான முன்பதிவு தொடங்கி உள்ளது. அந்தக் கோயிலின் மண்டல மகர விளக்கு பூஜையையொட்டி திருவிதாங்கூா் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், ஒசூா் துணை அஞ்சலகம் மற்றும் 38 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் அடங்கிய பெட்டகத்தின் விலை ரூ. 450 மட்டுமே. ஒரு நபா், ஒரு விண்ணப்பம் மூலமாக அதிகபட்சமாக 10 பிரசாதப் பெட்டகங்களைப் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பிரசாதம் விரைவு தபால் மூலம் முன்பதிவு செய்த பக்தா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.