ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பள்ளித் திறப்பு: கிருஷ்ணகிரியில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளித் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்.
Updated On :8 ஜனவரி 2021, 3:25 am

DIN

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், பள்ளியின் தலைமையாசிரியா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 375 மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 652 மாணவிகளும் படித்து வருகின்றனா். இதில் 75 சதவீத மாணவிகளின் பெற்றோா் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோரில் 95 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், 5 சதவீதம் போ் பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என்றும் கருத்துகளை முன்வைத்தனா். இந்தக் கூட்டத்தை ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.