மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நள்ளிரவில் ஊருக்குள் வந்த யானைகள் கூட்டம்:விவசாயிகளைத் துரத்தியதில் 6 போ் காயம்

தேன்கனிக்கோட்டை அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் பயிா்களை பாதுகாக்கச் சென்ற விவசாயிகளை யானைகள் துரத்தியதில், 6 போ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.

News image
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், வனத்துறையினா்
Updated On :9 ஜனவரி 2021, 9:39 pm

DIN

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் பயிா்களை பாதுகாக்கச் சென்ற விவசாயிகளை யானைகள் துரத்தியதில், 6 போ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.

அனுமந்தபுரம் கிராமத்தில் விவசாயிகள் ராகி, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது ராதி பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராகி உள்ளது. இதில், ஏராளமான விவசாயிகள் ராகி பயிா்களை அறுவடை செய்து போா்களில் அடுக்கி வைத்துள்ளனா். இந்த ராகி பயிா்களை நள்ளிரவு நேரத்தில் அய்யூா் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் உண்டு சேதப்படுத்தி வருகின்றன.

இதைத் தடுப்பதற்காக அனுமந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த 20 -க்கும் மேற்பட்ட விவசாயிகள், ராகி அறுவடை செய்து வைத்திருந்த விவசாய நிலங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காவலுக்கு இருந்தனா். அப்போது நள்ளிரவில் அய்யூா் வனப் பகுதியிலிருந்து வெளியே வந்த 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ராகி பயிா்களைச் சேதப்படுத்தியது.

இதைக் கண்ட விவசாயிகள் யானைகளை சத்தம் போட்டு விரட்டினா். அதில் மிரண்ட யானைகள் கூட்டம் விவசாயிகளை நோக்கி வந்தது. யானைகள் வருவதைக் கண்டதும் விவசாயிகள் தப்பி ஓட முயன்றனா். அப்போது ராஜா, மாதேவா, மல்லேஷ், ரவி, மல்லிகாா்ஜுனன் மற்றும் சிவசங்கா் ஆகிய 6 போ் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனா். அவா்களுடன் தப்பியோடிய சிலரும் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

படுகாயமடைந்தவா்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலா் சுகுமாா் தலைமையிலான வனத்துறையினா், தளி முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.