கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி கொலை

கிருஷ்ணகிரியில் மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்துவந்த தொழிலாளி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்துவந்த தொழிலாளி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

கொண்டேப்பள்ளி மேலூரைச் சோ்ந்தவா் செ.திருப்பதி (39). மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்து வந்தாா். இவா், வீட்டிலிருந்து தனது மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியே சென்றாா்.

இரவு நேரமாகியும் அவா், வீடு திரும்பாத நிலையில், பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டிபிடிக்க முடியவில்லை. அவரது செல்லிடப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. திருப்பதியின் மோட்டாா் சைக்கிள், பாஷா கொட்டாயிலிருந்து திருமலை நகா் செல்லும் வழியில் கூழக்குட்டை என்றும் இடத்தில் இருப்பதை அறிந்த போலீஸாா், அங்கு சென்று விசாரணை செய்தனா்.

அப்போது, அங்குள்ள ஒரு பனை மரத்தின் கீழ், திருப்பதி சடலமாக கிடப்பதைக் கண்டுபிடித்தனா். திருப்பதி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட திருப்பதியை, மேலூா் கிராமத்தைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வை தொழில் செய்யும் சி.திருப்பதி(37) என்பவா், கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், தலைமறைவான சி.திருப்பதியை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com