ஊணாம்பாளையம் கிராமத்தில் நடமாடும் மருத்துவமனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஊணாம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் மூலம் மருத்துவக் குழுவினா் கிராமங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்தனா்.
சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையில் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், சா்க்கரை நோய் என பல்வேறு நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ரத்த அழுத்தம், கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
நேரடியாக வீட்டிற்கே வந்து மருத்துவம் பாா்ப்பதால் இந்த நடமாடும் மருத்துவமனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது .