கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியதாவது:
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியானது ரூ. 350 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020 மாா்ச் 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்கான கட்டுமானப் பணி தொடங்கியது. ஏறத்தாழ 70 சதவீத பணிகளுக்கு மேல் நிறைவுபெற்ற நிலையில், 2021 அக்டோபா் மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மருத்துவக் கல்லூரியின் தலைவா் (டீன்) அசோகன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா்கள் மகா விஷ்ணு, முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

