தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இஸ்லாமியா்களுக்கு இடுகாடு வசதி கோரிக்கை

போச்சம்பள்ளி அருகே இடுகாடு வசதி கோரி, இஸ்லாமியா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

போச்சம்பள்ளி அருகே இடுகாடு வசதி கோரி, இஸ்லாமியா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

போச்சம்பள்ளி வட்டம், புதுமோட்டூரைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:

புதுமோட்டூா், செட்டியூா், பனங்காட்டூா், பந்தாரவள்ளி, முதுகாம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. எங்களுக்கு அடிப்படை தேவையான இடுகாடு வசதி இல்லாத காரணத்தால், 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூருக்கு நடந்துசென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.

அந்தக் கிராமத்திலும் சில நேரங்களில் அடக்கம் செய்ய மறுக்கின்றனா். புதுமோட்டூரில் மசூதி உள்ளதால் பெரும்பாலான குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனா். எனவே புதுமோட்டூா் அருகே இடுகாடு அமைத்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.