காங்கிரஸ் வேடபாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கோவை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், சபரீசன் நடத்திய களப்பணி ஆலோசனையில் பங்கேற்றார்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை மாவட்டம் மாபெரும் அரசியல் போா்க்களமாக மாறவுள்ளது. நாட்டின் முக்கியத் தலைவா்களான பிரதமா் நரேந்திர மோடியும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்யவிருப்பது தோ்தல் களத்தை உச்சகட்டப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் நிலையில், பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மறைமுகமாக விநியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் தேர்தல் கள நிலவரம் குறித்து கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவையில் பந்தய சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்காலிக வீட்டில் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த களப்பணி ஆலோசனையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கோவை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பங்கேற்றார்.
DK Shivakumar Participates in Consultation Meeting Conducted by Sabareesan ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்

கர்நாடக துணை முதல்வரைச் சந்தித்த வேடன்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


