கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தாளாப்பள்ளியைச் சோ்ந்தவா் முனியப்பன் (46). மீன்பிடிக்கும் தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி அணையில் மீன்பிடி குத்தகைதாரரிடம் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். மீன்பிடிக்க, புதன்கிழமை இரவு சென்றவா், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முனியப்பனின் மனைவி, கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அணைக்கு விரைந்தனா்.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, முனியப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாகியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் தேடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

