கிருஷ்ணகிரியில் குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, குருத்தோலை பவனி நடைபெற்றது.
இயேசு நாதரை தங்கள் அரசானாக ஏற்றுக் கொண்ட இஸ்ரேல் மக்கள் அவரை, கழுதையின் மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனா். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வை ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாகக் கொண்டாடி வருகின்றனா்.
அதன்படி, கிருஷ்ணகிரி நகரில் உள்ள புனித பாத்திமா அன்னை திருத்தலத்திலிருந்து குருத்தோலை பவனி தொடங்கி அருகில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் நிறைவு பெற்றது. இந்தப் பவனியில் பங்கேற்றோா் குருத்தோலையை கையில் ஏந்தி உன்னதங்களின் ஒசாண்ணா என்ற பாடலைப் பாடியவாறு பவனி சென்றனா்.
தொடா்ந்து, ஆலய பங்குதந்தை இசையாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ சமூகதத்தினா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், ஊத்தங்கரை, ராயக்கோட்டை, கந்திகுப்பம், எலத்தகிரி, போச்சம்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


