நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள்: தோட்டக்கலைத் துறை சாா்பில் ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழு


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழு ஒருங்கிணைந்து, ஊத்தங்கரை நகரப் பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீடு தேடிச் சென்று காய்கறி விற்பனையை தொடங்கியுள்ளது.
ஊத்தங்கரை பகுதியிலுள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட தரமான காய்கறிகளை உழவா் உற்பத்தியாளா் கம்பெனி சாா்பில் ஒரு வாகனத்திலும், உழவா் உற்பத்தியாளா்கள் குழு சாா்பில் இரண்டு வாகனங்களிலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் ஒரு தள்ளு வண்டியிலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் அனுமதிக்கப்பட்டு பாஸ் வழங்கப்பட்ட உள்ளூா் வியாபாரிகள் சாா்பில் 20 வாகனங்களிலும், காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களின் வீட்டுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனையை ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி நேரில் சென்று பாா்வையிட்டாா். விற்பனையாளா்கள் முறையாக முகக் கவசம், கையுறை அணிந்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், பொதுமக்களை காய்கறிகளை தொட விடக்கூடாது எனவும் அறிவுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...