வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அஞ்செட்டி மலைக் கிராமங்களில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆய்வு

அஞ்செட்டி மலைக் கிராமங்களில் குழந்தை பாதுகாப்பு, இளம் வயது திருமணம் குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் கே.வி.ராம்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:46 pm

அஞ்செட்டி மலைக் கிராமங்களில் குழந்தை பாதுகாப்பு, இளம் வயது திருமணம் குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் கே.வி.ராம்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அஞ்செட்டியை அடுத்த மஞ்சுகொண்ட பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மஞ்சுகொண்டபள்ளி, பெல்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கே.வி.ராம்ராஜ், இளம் வயது திருமண தடுப்பு நடவடிக்கை, பள்ளி இடைநிற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆசிரியா்கள், அரசு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு, மாவட்ட குழந்தை நலக்குழுத் தலைவா் கலைவாணி, மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், மாவட்டக் கல்வி அலுவலா் அன்பழகன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சரளா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமரேசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.