எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவேரிப்பட்டணத்தில் இடிந்து விழுந்த வீடு: திமுக சார்பில் ஒரு லட்சம் நிவாரணம்

காவேரிபட்டணத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்தது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ-.1 லட்சம் நிவாரணத்தை திமுக சார்பில்  மாவட்ட செயலாளர் டி.செங்குட்டுவன், புதன்கிழமை  வழங்கினார்.

News image
திமுக சார்பில் ஒரு லட்சம் நிவாரணம் நிதி
Updated On :17 நவம்பர் 2021, 9:55 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்தது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ-.1 லட்சம் நிவாரணத்தை திமுக சார்பில்  மாவட்ட செயலாளர் டி.செங்குட்டுவன், புதன்கிழமை  வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் சூரிய நாராயண ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் ஜோதிபுரம், சந்தை பாளையம், சுண்ணாம்பு தெரு களில் உள்ள குடியிருப்புகளில் நுழைந்தது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமை வகித்தார். திமுக பிரமுகர் கேவிஎஸ் சீனிவாசன், பேரூர் கழக செயலாளர் ஜேகேஎஸ் பாபு, ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பாய், தலையணை, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கிய, மாவட்ட செயலாளர், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, ஜோதிபுரத்தில் வசிக்கும் முருகேசன்(60) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் உள்ள உள்ளவர்கள் ஆய்வு நடந்த இடத்தில் இருந்ததால் அனைவரும் உயிர் தப்பினர். இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்ட திமுக மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினரிடம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிவாரணத்தை வழங்கினார்.

முன்னதாக 200க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கழக முன்னாள் செயலாளர் விவேகானந்தன், மாவட்ட  அணிகளின் துணை அமைப்பாளர்கள்,  செந்தில்குமார், விஜய்ஆனந்த், அமுதாபழனி, சின்னராஜ், முத்து, சங்கர், பாபாமாதையன், கருணாநதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.