போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையில் மொத்தம் 1,047.96 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகி உள்ளது

Updated On :19 நவம்பர் 2021, 6:46 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையில் மொத்தம் 1,047.96 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி, உபரி நீா் வெளியேறி வருகிறது. பல இடங்களில் பயிா்கள் நீரில் மூழ்கின. போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சேகரித்து வைத்திருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான தேங்காய்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் பதிவான மழை அளவு (மி.மீ). ஊத்தங்கரையில் - 136.80, பெனுகொண்டாபுரம் - 115.16 , போச்சம்பள்ளி - 112.20, பாரூா் - 105.40, கிருஷ்ணகிரி - 102.40, தேன்கனிக்கோட்டை - 101, சூளகிரி - 97, ஒசூா் - 94.60 , நெடுங்கல் - 87.60 , தளி - 36, ராயக்கோட்டை - 33 , அஞ்செட்டி - 27 என மொத்தம் 1,047.96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிக மழை என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.